சாய்பாபா என் மகளுக்கு ஒரு பொருத்தமான வரனை மகாபாராயணத்தின் பொழுது கொடுத்தார்
இந்தியாவில் இருந்து ஷீர்டி சாய் பக்தர் தீபா வெங்கடேஷ் கூறுகிறார்: நான் தீபா வெங்கடேஷ், அனைவருக்கும் சாய் ராம். கடந்த 4 ஆண்டுகளாக எனது மகளுக்கு தகுந்த ஒரு வரன் வரனை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடையினால் அவளுடைய திருமணம் தாமதமாகிக்கொண்டிருந்தது. குடும்பத்தின் சூழ்நிலைகள் மோசமாகி கொண்டிருந்தன.அப்போதுதான் நான் மகாபாராயண் குழுவில் இணைந்தேன். பாரயண் செய்யத் தொடங்கியபோது என்னால் கொஞ்சம் மன அமைதியைப் பெற முடிந்தது. நான்காவது வாரத்திற்குப் பிறகு நாங்கள் அனைவரும் விரும்பிய ஒரு வரன் கிடைத்தது. 5 வது வார பாராயணத்தின் போது மணமகனின் தரப்பிலிருந்து சம்மதம் கிடைத்து என் மகள் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிவடைந்தது. ஸ்ரீ சாய் பாபாவுக்கு எல்லா புகழும்.என் மகள் பெற்றிருக்கும் வாழ்க்கை சாயின் ஆசீர்வாதம் இல்லாமல் சாத்தியமில்லை. பாபாவுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதில் நான் கடன்பட்டிருக்கிறேன்.மகாபாராயண் உண்மையிலேயே நம்முடைய எல்லா பாவங்களையும் கர்மங்களையும் சாம்பலாக அழிக்கிறது. மகாபாராயண் மூலம் சாய் எங்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்.சாய்ராம்
தீபா வெங்கடேஷ்
January 01, 2018
https://experiences.mahaparayan.com/2018/01/sai-baba-blessed-my-daughter-with.html இருந்து மொழிபெயர்க்கப்பட்டது

Comments
Post a Comment