பாபா கோவில் பிரசாத்தின் மகிமை உணர்த்திய பாபா ஓரு நாள் நான் சனிக்கிழமையன்று பாபா கோவிலுக்கு சென்று இருந்தேன். பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். பிறகு ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போது என் எதிரில் பெரிய வரிசையில் ஆண்களும் பெண்களும் பிரசாதம் பெறுவதற்காக நின்று இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு போகலாம் என்று வந்து விட்டேன். வீட்டிற்கு வந்தவுடன், எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர் ஊசி, மருந்து எல்லாம் கொடுத்தும், வீட்டு வைத்தியம் செய்தும் என் வயிற்று வலி தீரவில்லை. அடுத்த சனிக்கிழமையும் வலியுடன் கோவிலுக்கு சென்றேன், வழக்கம் போல பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். அன்று அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்தேன். அப்போது அனைவரும் பிரசாதம் பெற வரிசையில் நின்றனர். அப்போது என் மனதில், சென்ற வாரம் பிரசாதம் வாங்கவில்லை. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வயிற்று வலி. எனவே பாபா இன்று நான் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று கொள்கிறேன், பிரசாதம் சாப்பிட்டதும் வயிற்று வலி சரியாகிவிடும் படியாக அருள் பாலிக்கும் ...