சாய்பாபா நிழலாக என்னுடன் எப்போதும் இருக்கிறார்
ஓம் சாய்ராம். இந்த அற்புத அனுபவம் எனக்கு 2019 தீபாவளியன்று ஏற்பட்டது. தீபாவளி அன்று நிறைய அகல் விளக்குகளை என் வீடு முழுவதும் ஏற்றிவைத்தேன் . பிறகு என்னுடைய அறையிலும் ஒரு விளக்கை ஏற்றலாம் என்று நினைத்தேன். ஒரு விளக்கை ஏற்றி அங்கிருந்த ஜன்னல் பக்கத்தில் முதலில் வைக்கலாம் என்று நினைத்தேன் பிறகு என் மனதை மாற்றிக்கொண்டு என் அறையில் இருந்த மேஜை மீது வைத்தேன். என் மேஜை மேல் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து வேறு இடத்தில் வைத்தேன். மேஜை மீது என்னுடைய மேஜை கடிகாரம் மற்றும் ஒரு பாட்டில் இருந்தது. நான் அறையை விட்டு வெளியே போகும் முன் என் அறையின் மின்சார விளக்கை அணைத்தேன். விளக்கை அணைத்த உடன் அங்கிருந்த சுவரில் ஏற்றப்பட்ட அகல் விளக்கினால் , மேஜைமேல் இருந்த பாட்டிலும் மேஜை கடிகாரமும் சேர்ந்து சுவரில் நிழலாய் விழுந்தது. சுவரில் விழுந்த அந்த நிழலை கீழே போட்டோவாக இணைத்துள்ளேன்.
காலையிலிருந்தே பாபாவின் ஆரத்தி பாடல் என் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது . அத்துடன் இந்த நிழலைப் பார்த்தவுடன் நான் மிகவும் பரவசமடைந்தேன். இந்த நாளை என்னால் என்றும் மறக்க முடியாது பாபா என்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதை சுவரில் விழுந்த இந்த நிழல் எனக்கு உணர்த்தியது. சாய்பாபாவை நம்புபவர்களுக்கு அவர் என்றும் உடனிருந்து வழிகாட்டுகிறார் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.



Comments
Post a Comment