Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 23



பாபா கோவில் பிரசாத்தின் மகிமை உணர்த்திய பாபா 

ஓரு நாள் நான் சனிக்கிழமையன்று பாபா கோவிலுக்கு சென்று இருந்தேன். பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். பிறகு ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போது என் எதிரில் பெரிய வரிசையில் ஆண்களும் பெண்களும் பிரசாதம் பெறுவதற்காக நின்று இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு போகலாம் என்று வந்து விட்டேன். வீட்டிற்கு வந்தவுடன், எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர் ஊசி, மருந்து எல்லாம் கொடுத்தும், வீட்டு வைத்தியம் செய்தும் என் வயிற்று வலி தீரவில்லை. அடுத்த சனிக்கிழமையும் வலியுடன் கோவிலுக்கு சென்றேன், வழக்கம் போல பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். அன்று அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்தேன். அப்போது அனைவரும் பிரசாதம் பெற வரிசையில் நின்றனர். அப்போது என் மனதில், சென்ற வாரம் பிரசாதம் வாங்கவில்லை. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வயிற்று வலி. எனவே பாபா இன்று நான் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று கொள்கிறேன், பிரசாதம் சாப்பிட்டதும் வயிற்று வலி சரியாகிவிடும் படியாக அருள் பாலிக்கும் படி வேண்டி கொண்டேன். என்ன ஆச்சர்யம் கோவிலில் இருந்து வெளியில் வருவதற்கு முன்பே வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. அன்று முதல் எந்த கோவில் சென்றாலும். பிரசாதம் கொடுத்தால் வாங்காமல் வருவது இல்லை. இது பாபா எனக்கு உணர்த்தியது. ஜெய் ஜெய் சாய் ராம்.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாயியின் கருணை!

  சாய் ராம்! நன்றி பூஜாஜி.  நான் மகாபாராயணத்தில் இணைந்து சாய்சத்சரித்திரம் படித்தேன் , இதற்கு முன்பும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். மற்றொரு சாய் அதிசயத்தை அனைத்து மகாபாராயண் பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கு ஆசீர்வதித்த பாபாவுக்கு நான் மனமார்ந்த நன்றி சொல்ல விரும்புகிறேன். நேற்று, நான் எனது வருடாந்திர    மருத்துவ பரிசோதனைக்கு ( medical checkup ) சென்றேன்.  மருத்துவர் பரிசோதித்தபோது என் மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். மார்பக புற்றுநோயைப் பற்றி சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டதால் நான் பயந்தேன். என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், எனக்கும் இருக்குமோ என்று???  எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 25 கீமோதெரபி மற்றும் சில கதிர்வீச்சுகளுக்கு ஆளானார், அவளும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கள் வாழ்க்கையில் இந்த நேரத்தில் ஒரு மருத்துவ சூழ்நிலையை என் குடும்பத்தினரோ அல்லது என்னால் கையாள முடியாது. 3 டி இமேஜிங் மற்றும் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 4

வாங்குபவரின் வடிவத்தில் பாபா உதவினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சாய் பக்தர் புஷ்பா பஜாஜ் கூறுகிறார்: அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய்ராம் . நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த புஷ்பா. நான் மகாபாராயணத்தைத் தொடங்கிய பிறகு எனக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சமீபத்தில் எனக்கு ஒரு அழகான அதிசயம் ஏற்பட்டது, இதை பாபாவின் அனைத்து பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை மகாபாராயணில் சேரச் செய்த பாபாவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனக்கு ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளது, இது 2006 முதல்  இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் சந்தை மிகவும் மோசமாக இருந்தது. சந்தை மோசமாக இருப்பதால் வாங்குபவர் மற்றும் வாடகைக்கு வீடு  எடுப்பவர் யாரும் இல்லை, இதன் காரணமாக சந்தை எவ்வாறு மேம்படும் என்று நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். நவம்பர் 20, 2017 திங்கட்கிழமை அதிகாலையில் நான் வழக்கமாகச் செய்யும் காகட் ஆரத்தி செய்து கொண்டிருந்தேன். நான் ஆரத்தி செய்து கொண்டிருந்தபோத...