என் வாழ்க்கையில் நான் அனுபவித்த மிகப் பெரிய தெய்வீக சக்தி சாய் பாபா
சீரடி சாய்பாபாவின் ஏற்பட்ட என்னுடைய அற்புத அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த அனுபவம் எனக்கு ஏப்ரல் 2018ல் ஏற்பட்டது. நான் தென்னாப்பிரிக்காவில் 2015 ஆண்டுமுதல் வசித்து வருகிறேன். பிப்ரவரி2018 மாதம் என்னுடைய விசா முடிவடைகிறது. என்னுடைய வீசாவை இந்தியா வந்து தான் புதுப்பிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை. விசா அப்ளை செய்வதற்கு முன்பு விசாரித்ததில் 2 3 வாரங்களில் கிடைத்துவிடும் என்று சொன்னார்கள். விசா பெறுவதற்கு நீண்ட நாட்கள் தேவையில்லை என்று கருதியதால் நான் என்னுடைய கணவரையும் என்னுடைய எட்டு வயது மகனையும் தென்ஆப்பிரிக்காவில் விட்டுவிட்டு நாம் மட்டும் இந்தியா வந்தேன். நாட்கள் செல்ல செல்ல என் விசா குறித்து தென் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து தூதரகத்தில் இருந்து எந்தவித தகவலும் இல்லை கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்து விட்டது. இதனால் நான் அமைதி இழந்தேன்ன். தினமும் தூதரகத்திற்கு போன் செய்தேன். ஆனால் ஒரு பயனும் இல்லை அரசியல் பலம் பெற்றவர்கள் மூலமாகவும் முயற்சி செய்தேன் அதனாலும் ஒரு பயனும் இல்லை. கடைசியாக தூதரகத்தில் எனக்கு விசா கிடைக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகும் என்று சொல்லப்பட்டது. என்னுடைய மகன் அங்கே நான் இல்லாமல் மிகவும் ஏங்க தொடங்கினான். எனக்கும் கணவர் குழந்தையை விட்டுவிட்டு இன்னும் எவ்வளவு நாட்களாகும் என்று தெரியாமல் தவிப்பாக இருந்தது. எனக்கு என் விசா சீக்கிரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. தென்னாப்பிரிக்காவின் தூதரகத்தின் செயல்கள் மிக மந்தமாக இருந்தது. எப்படியும் விசா கிடைக்க மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தோன்றியது.
நான் மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருந்தாலும் நான் ஒருபோதும் சாய் பக்தையாக இருந்ததில்லை, ஷீர்டிக்கும் சென்றதில்லை. சீரடி செல்லவேண்டும் என்று எனக்கு கனவில்கூட தோன்றியதில்லை அந்த ஆசையும் என்றும் எனக்கு இருந்ததில்லை. வீட்டில் மனவருத்தத்துடன் இருந்ததால் திடீரென எனக்கு சீரடி செல்லவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது . இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஏன் ஷீர்டி என்று எனக்கு புரியவில்லை. அந்த எண்ணத்தில் உடனடியாக, நான் ஒரு காரையும் ஹோட்டலையும் முன்பதிவு செய்தேன், 2-3 நாட்களுக்குள் நான் ஷீர்டியில் இருந்தேன். ஷிர்டியை முதல் முறையாகப் பார்த்தேன், சன்னதியைப் பார்வையிட்டேன். நான் ஷிர்டியில் ஒரு இரவு தங்கியிருந்தேன். எனக்குள் என் விசா குறித்த பிரார்த்தனையோ அல்லது வேறு எந்த பிரார்த்தனையோ செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. பின்னர் பாபாவின் தரிசனத்திற்குப் பிறகு புனேவுக்குத் காரில் சென்று கொண்டிருந்தேன். நான் ஷீர்டி எல்லையைத் தாண்டும் பொழுது , இன்னும் ஒரு வாரத்தில் எனது விசா இறுதி செய்யப்படும் என்று குடியேற்ற வழக்கறிஞரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. என்னுடைய வழக்கறிஞர் என் விசா குறித்து எந்தவிதமான தகவலையும் எனக்கு சொன்னதில்லை. நான் எத்தனை முறை அணுகினாலும் அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் இருக்காது. இப்பொழுது நான் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவரிடமிருந்து e-mail வந்திருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. புனேவுக்குத் திரும்பிய பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். மறுநாள் காலையில், நான் அறையில் உட்கார்ந்து என் அம்மாவுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய தொலைபேசியில் என்னுடைய விசா ரெடி ஆகிவிட்டது என்று தகவல் வந்ததை பார்த்து ஆனந்த அதிர்ச்சி ஆகி விட்டேன். அன்றைய தினமே என்னுடைய பாஸ்போர்ட்டும் என்னுடைய இந்திய முகவரிக்கு வந்து சேர்ந்தது. இவை அனைத்தும் நடந்தது, நான் ஷீர்டிக்குச் சென்ற உடனேயே! எனது விசா 2 வது மாத இறுதியில் வந்தது. நான் 3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் காத்திருக்க தேவையில்லை. பாபாவை சந்தித்த உடனேயே எனக்கு கிடைத்தது. ஓம் சாய் ராம். சாய் பாபா என் வாழ்க்கையில் நான் அனுபவித்த மிகப் பெரிய தெய்வீக சக்தி.
இந்த அனுபவத்தைப் பற்றி இன்னும் சிலிர்ப்பூட்டும் விஷயம் என்னவென்றால், நான் புனேவில் பிறந்தேன், என் வாழ்நாள் முழுவதும் மகாராஷ்டிராவில் வாழ்ந்தேன், ஆனால் ஒருபோதும் ஷீர்டிக்குச் சென்றதில்லை அல்லது ஷீர்டியை பார்க்க வேண்டும் என்றுகூட நினைத்ததில்லை. இருப்பினும், பாபாவின் 100 வது ஆண்டு விழாவில், அவர் என்னை அழைத்தார். அவர் என்னை இந்தியாவில் இருந்து அழைக்கவில்லை, நான் இந்தியாவுக்கு வெளியே என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவர் என்னை அழைத்தார். இது அவருடைய லீலா. அவருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
Sheetal Anish


Comments
Post a Comment