Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 4






வாங்குபவரின் வடிவத்தில் பாபா உதவினார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சாய் பக்தர் புஷ்பா பஜாஜ் கூறுகிறார்: அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய்ராம் . நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த புஷ்பா. நான் மகாபாராயணத்தைத் தொடங்கிய பிறகு எனக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சமீபத்தில் எனக்கு ஒரு அழகான அதிசயம் ஏற்பட்டது, இதை பாபாவின் அனைத்து பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை மகாபாராயணில் சேரச் செய்த பாபாவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனக்கு ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளது, இது 2006 முதல்  இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் சந்தை மிகவும் மோசமாக இருந்தது. சந்தை மோசமாக இருப்பதால் வாங்குபவர் மற்றும் வாடகைக்கு வீடு  எடுப்பவர் யாரும் இல்லை, இதன் காரணமாக சந்தை எவ்வாறு மேம்படும் என்று நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன்.

நவம்பர் 20, 2017 திங்கட்கிழமை அதிகாலையில் நான் வழக்கமாகச் செய்யும் காகட் ஆரத்தி செய்து கொண்டிருந்தேன். நான் ஆரத்தி செய்து கொண்டிருந்தபோது, எனது தொழில் குறித்து பாபாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று என்னை ஏன் உன் அலுவலகத்திற்கு  அழைத்துச் செல்லவில்லை என்று பாபா தனது மூர்த்தியிலிருந்து என்னிடம் பேசுவதைக் கேட்டேன். என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள், உன் எல்லா கவலைகளையும் நீக்குவேன் என்கிற குரல் கேட்டது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது, என் கண்களில் கண்ணீர் உருண்டது. நான் எனது மொபைலில் மூர்த்தி படத்தை எடுத்தேன் (படத்தை இணைத்துள்ளேன்)









நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கவேண்டும்  என்று பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன்.அதே நாளில் நான் காலையில் என் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது என் மொபைலைத் திறந்து பாபாவிடம் பிரார்த்தனை செய்து என் இருக்கையில் அமர்ந்தேன். நான் அமர்ந்தவுடன்  நிலம் வாங்கும் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அவருக்கு விவரங்களைக் கொடுத்தேன், அவர் டெவலப்பர் அலுவலகத்தில் 30 நிமிடங்களில் என்னைச் சந்திப்பதாகக் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒப்பந்தத்தை முடிக்க பாபாவிடம் கெஞ்சினேன், எனது அனுபவத்தை பதிவிடுகிறேன் என்று பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன்.

நான் டெவலப்பர் அலுவலகத்தை அடைந்தவுடனேயே என்னை அழைத்த உள்ளூர் மனிதரை சந்தித்தேன், அந்த நபர் பாபாவைப் போலவே இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். பாபாவே நிலம் வாங்க வந்திருப்பது போல தோன்றியது. 10 நிமிட நேரத்தில் அவர் எதுவும் கேட்காமல் காசோலையை கொடுத்து, அவருக்காக நிலத்தை முன்பதிவு செய்யச் சொன்னார்.இது பாபாவின் லீலா, ஒரு வாடிக்கையாளராக என்னிடம் வந்து எனக்கு ஒரு அழகான கமிஷனைக் கொடுத்தது அல்லவா? ஐ லவ் யூ பாபா. எப்போதும் என்னுடன் மற்றும் மகா பாராயணில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுடனும், படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுடனும் இருங்கள். தயவுசெய்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதியுங்கள். உங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் அன்பையும் பொழியுங்கள். . எனது அனுபவத்தை எவ்வாறு எழுத வேண்டும் என்பதற்கான பாதையை எனக்குக் காட்டியதற்கு  பூனம் மதானி அவர்களுக்கு  நன்றி .

 ஓம் சாய் ராம்
புஷ்பா பஜாஜ்
(எம்.பி.- 75 வளைகுடா சாய்)
 November 27, 2017
https://experiences.mahaparayan.com இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாயியின் கருணை!

  சாய் ராம்! நன்றி பூஜாஜி.  நான் மகாபாராயணத்தில் இணைந்து சாய்சத்சரித்திரம் படித்தேன் , இதற்கு முன்பும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். மற்றொரு சாய் அதிசயத்தை அனைத்து மகாபாராயண் பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கு ஆசீர்வதித்த பாபாவுக்கு நான் மனமார்ந்த நன்றி சொல்ல விரும்புகிறேன். நேற்று, நான் எனது வருடாந்திர    மருத்துவ பரிசோதனைக்கு ( medical checkup ) சென்றேன்.  மருத்துவர் பரிசோதித்தபோது என் மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். மார்பக புற்றுநோயைப் பற்றி சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டதால் நான் பயந்தேன். என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், எனக்கும் இருக்குமோ என்று???  எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 25 கீமோதெரபி மற்றும் சில கதிர்வீச்சுகளுக்கு ஆளானார், அவளும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கள் வாழ்க்கையில் இந்த நேரத்தில் ஒரு மருத்துவ சூழ்நிலையை என் குடும்பத்தினரோ அல்லது என்னால் கையாள முடியாது. 3 டி இமேஜிங் மற்றும் ...