பாபா என் மகனின் விருப்பத்தை நிறைவேற்றினார்
ஷிர்டி சாய் பக்தர் நீரஜாஜி கூறுகிறார்: அனைவருக்கும் சாய்ராம். மகாபாராயணத்தின் போது ஏற்பட்ட எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவதற்கு முன், எனது இறைவன் ஸ்ரீ சத்குரு சாய்நாத் மகாராஜின் திருவடிக்கு முன் தாழ்மையுடன் வணங்குகிறேன். நான் நீரஜா சுனில் , ஜனவரி 2019 முதல் மகாபாராயணத்தின், இந்த மகத்தான யாகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இந்த மகாபாராயணத்தில் பங்கேற்க இந்த வாய்ப்பை எனது செளபாக்கியம் என்று கருதுகிறேன். இது இதுவரை ஒரு ஆனந்தமான மற்றும் அழகான பயணமாக இருந்தது. இந்த மகாபாராயணம் தொடங்கிய 2 மாதங்களுக்குள் என்னால் சில விஷயங்களை உணர முடிந்தது, இது எனக்கு மன அமைதியை கொண்டு வந்தது.
சமீபத்தில் நடந்த ஒரு அனுபவத்தை விவரிக்க விரும்புகிறேன். எனது மகன் தற்போது தனது பொறியியல் கல்வி படித்து வருகிறார், மேலும் பல இன்டர்ன்ஷிப் விருப்பங்களுக்காக முயற்சித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தனது கடைசி சுற்று வரை நேர்காணல்களில் தேர்ச்சி பெறுவார், இருப்பினும் அவரால் இறுதி சுற்றை முடிக்க முடியவில்லை. அவர் மிகவும் வருத்தப்பட்டார்.
மகாபாராயணத்தின் போது, பாபாவை என்னை வழிநடத்தி என்னுடன் இருக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட புதன்கிழமை மாலை, எனது மகன் தனது கனவு நிறுவனமாக இருந்த ஒரு வங்கியிடமிருந்து பதிலுக்காகக் காத்திருந்ததால், அன்று இரவு பாபாவின் ஆசீர்வாதங்களுக்காக தீவிரமாக பிரார்த்தனை செய்தேன். அடுத்த நாள் நான் எழுந்தபோது, அதாவது வியாழக்கிழமை காலை, நான் படுக்கையில் இருக்கும்போதே ஒரு குரல் தெளிவாகக் கேட்டது, என் மகன் விரும்பிய அமைப்பிலிருந்து தனது வேலைக்கான உத்தரவை பெறுவான் என்று. ஆரம்பத்தில் நான் இதை பிரம்மையாக உணர்ந்தேன், பாபா என்னுடன் எப்படி பேச முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வாறாயினும், சில மணி நேரங்களுக்குள் (எனது 2 அத்தியாயங்களின் வியாழக்கிழமை பாராயன் முடித்தவுடனேயே) எனது மகன் கூப்பிட்டு, அவர் பணிபுரிய வேண்டும் என்று கனவு கண்ட வங்கியில் இருந்து இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவித்தார்.
பாபாவின் அருளும் ஆசீர்வாதங்களும் இல்லாமல் இது சாத்தியமில்லை. என்னைச் சுற்றி அவருடைய இருப்பை நான் தெளிவாக உணர்ந்ததால் நான் பரவசத்தோடும் மகிழ்ச்சியோடும் உடல் சிலிர்த்தேன். எனது பிரார்த்தனைகளைக் கேட்டதற்காகவும், அவற்றை வழங்குவதில் தாராளமாக இருந்ததற்காகவும் நான் அவருக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்தேன். நான் தாழ்மையுடன் என் கைகளை மடித்து, அவருடைய பரிசுத்த பாதங்களில் பயபக்தியுடன் வணங்குகிறேன். பாபா என்னுடன் பேசினார், என் பிரார்த்தனைகளுக்கு பதிலளித்தார் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவருடைய சர்வவல்லமை உடைய மகிமையை பாடுவதற்கும் புகழ்வதற்கும் இந்த அனுபவப் பதிவை ஒரு இனிமையான வாய்ப்பாக நான் கருதுகிறேன். பாபா நம் எல்லோரையும் அளவிட முடியாத கிருபையுடனும், அன்புடனும் ஆசீர்வதிப்பாராக.
ஓம் ஸ்ரீ சாய்ராம்.
பக்தியுடன்,
நீரஜா சுனில்
March 02, 2020
https://experiences.mahaparayan.com இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த ஒரு அனுபவத்தை விவரிக்க விரும்புகிறேன். எனது மகன் தற்போது தனது பொறியியல் கல்வி படித்து வருகிறார், மேலும் பல இன்டர்ன்ஷிப் விருப்பங்களுக்காக முயற்சித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தனது கடைசி சுற்று வரை நேர்காணல்களில் தேர்ச்சி பெறுவார், இருப்பினும் அவரால் இறுதி சுற்றை முடிக்க முடியவில்லை. அவர் மிகவும் வருத்தப்பட்டார்.
மகாபாராயணத்தின் போது, பாபாவை என்னை வழிநடத்தி என்னுடன் இருக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட புதன்கிழமை மாலை, எனது மகன் தனது கனவு நிறுவனமாக இருந்த ஒரு வங்கியிடமிருந்து பதிலுக்காகக் காத்திருந்ததால், அன்று இரவு பாபாவின் ஆசீர்வாதங்களுக்காக தீவிரமாக பிரார்த்தனை செய்தேன். அடுத்த நாள் நான் எழுந்தபோது, அதாவது வியாழக்கிழமை காலை, நான் படுக்கையில் இருக்கும்போதே ஒரு குரல் தெளிவாகக் கேட்டது, என் மகன் விரும்பிய அமைப்பிலிருந்து தனது வேலைக்கான உத்தரவை பெறுவான் என்று. ஆரம்பத்தில் நான் இதை பிரம்மையாக உணர்ந்தேன், பாபா என்னுடன் எப்படி பேச முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வாறாயினும், சில மணி நேரங்களுக்குள் (எனது 2 அத்தியாயங்களின் வியாழக்கிழமை பாராயன் முடித்தவுடனேயே) எனது மகன் கூப்பிட்டு, அவர் பணிபுரிய வேண்டும் என்று கனவு கண்ட வங்கியில் இருந்து இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவித்தார்.
பாபாவின் அருளும் ஆசீர்வாதங்களும் இல்லாமல் இது சாத்தியமில்லை. என்னைச் சுற்றி அவருடைய இருப்பை நான் தெளிவாக உணர்ந்ததால் நான் பரவசத்தோடும் மகிழ்ச்சியோடும் உடல் சிலிர்த்தேன். எனது பிரார்த்தனைகளைக் கேட்டதற்காகவும், அவற்றை வழங்குவதில் தாராளமாக இருந்ததற்காகவும் நான் அவருக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்தேன். நான் தாழ்மையுடன் என் கைகளை மடித்து, அவருடைய பரிசுத்த பாதங்களில் பயபக்தியுடன் வணங்குகிறேன். பாபா என்னுடன் பேசினார், என் பிரார்த்தனைகளுக்கு பதிலளித்தார் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவருடைய சர்வவல்லமை உடைய மகிமையை பாடுவதற்கும் புகழ்வதற்கும் இந்த அனுபவப் பதிவை ஒரு இனிமையான வாய்ப்பாக நான் கருதுகிறேன். பாபா நம் எல்லோரையும் அளவிட முடியாத கிருபையுடனும், அன்புடனும் ஆசீர்வதிப்பாராக.
ஓம் ஸ்ரீ சாய்ராம்.
பக்தியுடன்,
நீரஜா சுனில்
March 02, 2020
https://experiences.mahaparayan.com இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments
Post a Comment