கடைசி மணித்துளிகள்
120 km வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன் ..என் ஆருயிர் நண்பன் இலக்கியத்தில் பல சாகசங்கள் செய்தவன் ... சாகித்திய அகடமி பரிசுகள் , பத்மஸ்ரீ , பதம பூஷன் போன்ற பட்டங்கள் பெற்றவன் ...
அவன் இலக்கியத்தில் செய்த பல சாதனைகள் விரைவில் நோபல் பரிசு கிடைக்கவும் வழி செய்தது ...
எத்தனை சாதனைகள் இந்த சின்ன வாழ்க்கை ஓட்டத்தில் செய்திருக்கிறான் ... !!
மனம் மிகவும் பெருமை பட்டது அவன் நண்பன் நான் என்று சொல்லிக்கொள்ள ...
அதே சமயம் இதயத்தில் ஒரு சிறு உளியால் எழுப்பிய சப்தம் ... வலி ...
என் சாதனை பக்கங்கள் பல இன்னும் வெற்றிடமாகத் தான் இருக்கின்றன ...
ஏதோ கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் வேலை , கொஞ்சமாக சம்பளம் , என்னையே கொஞ்சமாக கொஞ்சும் என் மனைவி , இப்படி வாழ்கிறேன் ...
சாதனைகளை விட படும் வேதனைகள் அதிகம் ....
எப்படி சமாளிக்கிறேன் என்று கேள்வி கேட்க்கிறீர்களா ?
எல்லாம் அந்த பச்சைப்புடவைக்காரியின் அருளால் ....
பின்னாடி ஒரு bmw கார் என்னை தாண்டி சென்று நின்றது ...
இறங்கி ஒருத்தி என் காரை நிறுத்தச் சொன்னாள் ...
நீங்கள் எங்கு போகிறீர்கள் ... நான் அப்போலோ ஹாஸ்பிடல் போகவேண்டும் ...
உங்களால் என்னை அங்கே drop செய்ய முடியுமா ?
உடனே கொஞ்சமும் யோசிக்காமல் ஏன் உங்கள் காருக்கு என்னவாயிற்று ? ....
அது வேறு திசையில் போகிறது ... மேலும் அது என்னுடைய கார் இல்லை ...
நான் சரி என்று சொல்வதற்கு முன் உரிமையுடன் என் காரில் ஏறி உட்கார்ந்தாள் ...
என்னையே ஏற்றிக்கொள்ள இவ்வளவு தயக்கமா ?
குரல் என் கோலக்கிளியுடையது ...
அம்மா நீயா .... நண்பன் ஒருவனுக்கு உடம்பு சரியில்லை அதனால் வேகமாக போய் கொண்டிருந்தேன் ... அதே சிந்தனையில் இருந்ததால் உன்னை சரியாக கவனிக்க தவறி விட்டேன் ...
சரி ... இப்பொழுது உன் நண்பன் தன் கடைசி தருணத்தில் இருக்கிறான் ...
அவன் மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சொல் பார்க்கலாம் .....
அம்மா என்ன நினைப்பான் , அவனுக்கு நோபல் பரிசு கிடைப்பதை போல் , இன்னும் பல மரியாதைகள் கிடைப்பதை போல் .... இன்னும் பணம் சேருவதைப்போல்
சரி உன்னை சூக்ஷமமாக அவன் மனதில் இப்பொழுது ஓடிக்கொண்டிருளுக்கும் எண்ணங்களை காண்பிக்கிறேன் ....
10 வருடங்களுக்கு முன் ஒரு ஏழை அநாதை சிறுவனுக்கு படிப்பு உதவியை செய்து அதனால் அந்த சிறுவன் அப்பா என்று அவனை கட்டிக்கொண்ட காட்சி ....
பிறகு சிவன் ஆலயம் கட்ட ஒரு பெரிய தொகையை கொடுத்த காட்சி , 100 ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்த காட்சி ,
முதியோர் இல்லங்களுக்கு சேவை செய்தது ....
என்ன ரவி திகைத்து ப்போய் விட்டாய் ... ?
கடைசியில் நினைவில் இருப்பது நீ என்னென்ன சாதித்தாய் என்ற எண்ணம் அல்ல , எப்படி அன்பை விதைத்தாய் அதை எப்படி வளர்த்தாய் என்பதே ...
அன்பே நான் ... நானே சிவம் ... இந்த நிலைதான் என்னுடன் சேரும் நிலை ...
சாதனைகள் ஓன்றும் செய்யவில்லையே என்று ஏங்காதே ...
எவ்வளவு அன்பை பிறரிடம் காட்டினாய் ...
எவ்வளவு பேருக்கு நீ தெய்வமாக தெரிந்தாய் என்பது தான் முக்கியம் ...
இந்த நினைவுகள் தான் உன் கடைசி மணித்துளிகளில் காட்சிகளாக வரவேண்டும் ...
ப⁴வானி த்வம் தா³ஸே மயி
என்று சொல்ல வந்தவன் வெறும் பவானித்வம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன் அவனுக்கு என்னையே கொடுத்து விட்டேன் ...
முழுவதையும் நான் கேட்க வில்லை...
அன்பினால் மட்டுமே என்னை அடிமை படுத்த முடியும் ...
நல்ல நினைவுகள் தான் உன்னுடைய அளவிட முடியாத சாதனைகள்
வேறு எதுவுமே சாதனைகள் ஆகாது ...
அம்மா சரியாக சொன்னாய் ...
உன்னுடன் இப்படி சந்தித்து பேச முடிகிறதே அதுவல்லவோ உன் அருளால் நான் பெற்ற பெரும் சாதனை ....
அன்பை மட்டுமே வளர்த்துக்கொண்டு உன்னிடம் இருந்து பவானித்வம் பெற்றுக்கொள்கிறேன் ...
சிரித்துக்கொண்டே மறைந்தாள் அந்த பேரழகி ....
மனதை தொடும் எழுத்துக்கள் எல்லாம் நல்ல அனுபவங்களாய் மனதில் பதிகின்றன. அந்த விதத்தில் ரவி அவர்களின் பதிவுகள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

Comments
Post a Comment