Skip to main content

அடியவர் ரவி அவர்களின் பதிவு -1 - கடைசி மணித்துளிகள்






கடைசி மணித்துளிகள்

120 km வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன் ..

என் ஆருயிர் நண்பன் இலக்கியத்தில் பல சாகசங்கள் செய்தவன் ... சாகித்திய அகடமி பரிசுகள் , பத்மஸ்ரீ , பதம பூஷன் போன்ற பட்டங்கள் பெற்றவன் ...

அவன் இலக்கியத்தில் செய்த பல சாதனைகள் விரைவில் நோபல் பரிசு கிடைக்கவும் வழி செய்தது ...

எத்தனை சாதனைகள் இந்த சின்ன வாழ்க்கை ஓட்டத்தில் செய்திருக்கிறான் ... !!

மனம் மிகவும் பெருமை பட்டது அவன் நண்பன் நான் என்று சொல்லிக்கொள்ள ...

அதே சமயம் இதயத்தில் ஒரு சிறு உளியால் எழுப்பிய சப்தம் ... வலி ...

என் சாதனை பக்கங்கள் பல இன்னும்  வெற்றிடமாகத் தான் இருக்கின்றன ...

ஏதோ கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் வேலை , கொஞ்சமாக சம்பளம் , என்னையே கொஞ்சமாக கொஞ்சும் என் மனைவி , இப்படி வாழ்கிறேன் ...

சாதனைகளை விட படும் வேதனைகள் அதிகம் ....


எப்படி சமாளிக்கிறேன் என்று கேள்வி கேட்க்கிறீர்களா ?

எல்லாம் அந்த பச்சைப்புடவைக்காரியின் அருளால் ....

பின்னாடி ஒரு bmw கார்  என்னை தாண்டி சென்று நின்றது ...

இறங்கி ஒருத்தி என் காரை நிறுத்தச் சொன்னாள் ...

நீங்கள் எங்கு போகிறீர்கள் ... நான் அப்போலோ ஹாஸ்பிடல் போகவேண்டும் ...

உங்களால் என்னை அங்கே drop செய்ய முடியுமா ?

உடனே கொஞ்சமும் யோசிக்காமல் ஏன் உங்கள் காருக்கு என்னவாயிற்று ? ....

அது வேறு திசையில் போகிறது ... மேலும் அது என்னுடைய கார் இல்லை ...

நான் சரி என்று சொல்வதற்கு முன் உரிமையுடன் என் காரில் ஏறி உட்கார்ந்தாள் ...

என்னையே ஏற்றிக்கொள்ள இவ்வளவு தயக்கமா ?

குரல் என் கோலக்கிளியுடையது ...

அம்மா நீயா .... நண்பன் ஒருவனுக்கு உடம்பு சரியில்லை அதனால் வேகமாக போய் கொண்டிருந்தேன் ... அதே சிந்தனையில் இருந்ததால் உன்னை சரியாக கவனிக்க தவறி விட்டேன் ...


சரி ... இப்பொழுது உன் நண்பன் தன் கடைசி தருணத்தில் இருக்கிறான் ...

அவன் மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சொல் பார்க்கலாம் .....

அம்மா என்ன நினைப்பான் , அவனுக்கு நோபல் பரிசு கிடைப்பதை போல் , இன்னும் பல மரியாதைகள் கிடைப்பதை போல் .... இன்னும் பணம் சேருவதைப்போல்

சரி உன்னை சூக்ஷமமாக அவன் மனதில் இப்பொழுது ஓடிக்கொண்டிருளுக்கும் எண்ணங்களை காண்பிக்கிறேன் ....

10 வருடங்களுக்கு முன் ஒரு ஏழை அநாதை சிறுவனுக்கு படிப்பு உதவியை செய்து அதனால் அந்த சிறுவன் அப்பா என்று அவனை கட்டிக்கொண்ட காட்சி ....

பிறகு சிவன் ஆலயம் கட்ட ஒரு பெரிய தொகையை கொடுத்த காட்சி , 100 ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்த காட்சி ,

முதியோர் இல்லங்களுக்கு சேவை செய்தது ....

என்ன ரவி திகைத்து ப்போய் விட்டாய் ...  ?

கடைசியில் நினைவில் இருப்பது நீ  என்னென்ன சாதித்தாய் என்ற எண்ணம் அல்ல , எப்படி அன்பை விதைத்தாய் அதை எப்படி வளர்த்தாய் என்பதே ...

அன்பே நான் ... நானே சிவம் ... இந்த நிலைதான் என்னுடன் சேரும் நிலை ...

சாதனைகள் ஓன்றும் செய்யவில்லையே என்று ஏங்காதே ...

எவ்வளவு அன்பை பிறரிடம் காட்டினாய் ...

எவ்வளவு பேருக்கு நீ தெய்வமாக தெரிந்தாய் என்பது தான் முக்கியம் ...

இந்த நினைவுகள் தான் உன் கடைசி மணித்துளிகளில் காட்சிகளாக வரவேண்டும் ...

ப⁴வானி த்வம் தா³ஸே மயி

என்று சொல்ல வந்தவன் வெறும் பவானித்வம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன் அவனுக்கு  என்னையே கொடுத்து விட்டேன் ...

முழுவதையும் நான் கேட்க வில்லை...

அன்பினால் மட்டுமே என்னை அடிமை படுத்த முடியும் ...

நல்ல நினைவுகள் தான் உன்னுடைய அளவிட முடியாத சாதனைகள்

வேறு எதுவுமே சாதனைகள் ஆகாது ...

அம்மா சரியாக சொன்னாய் ...

உன்னுடன் இப்படி சந்தித்து பேச முடிகிறதே அதுவல்லவோ உன் அருளால் நான் பெற்ற பெரும் சாதனை ....

அன்பை மட்டுமே வளர்த்துக்கொண்டு உன்னிடம் இருந்து பவானித்வம் பெற்றுக்கொள்கிறேன் ...

சிரித்துக்கொண்டே மறைந்தாள் அந்த பேரழகி ....


மனதை தொடும் எழுத்துக்கள் எல்லாம் நல்ல அனுபவங்களாய் மனதில் பதிகின்றன. அந்த விதத்தில் ரவி அவர்களின் பதிவுகள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. 



Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாயியின் கருணை!

  சாய் ராம்! நன்றி பூஜாஜி.  நான் மகாபாராயணத்தில் இணைந்து சாய்சத்சரித்திரம் படித்தேன் , இதற்கு முன்பும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். மற்றொரு சாய் அதிசயத்தை அனைத்து மகாபாராயண் பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கு ஆசீர்வதித்த பாபாவுக்கு நான் மனமார்ந்த நன்றி சொல்ல விரும்புகிறேன். நேற்று, நான் எனது வருடாந்திர    மருத்துவ பரிசோதனைக்கு ( medical checkup ) சென்றேன்.  மருத்துவர் பரிசோதித்தபோது என் மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். மார்பக புற்றுநோயைப் பற்றி சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டதால் நான் பயந்தேன். என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், எனக்கும் இருக்குமோ என்று???  எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 25 கீமோதெரபி மற்றும் சில கதிர்வீச்சுகளுக்கு ஆளானார், அவளும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கள் வாழ்க்கையில் இந்த நேரத்தில் ஒரு மருத்துவ சூழ்நிலையை என் குடும்பத்தினரோ அல்லது என்னால் கையாள முடியாது. 3 டி இமேஜிங் மற்றும் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 4

வாங்குபவரின் வடிவத்தில் பாபா உதவினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சாய் பக்தர் புஷ்பா பஜாஜ் கூறுகிறார்: அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய்ராம் . நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த புஷ்பா. நான் மகாபாராயணத்தைத் தொடங்கிய பிறகு எனக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சமீபத்தில் எனக்கு ஒரு அழகான அதிசயம் ஏற்பட்டது, இதை பாபாவின் அனைத்து பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை மகாபாராயணில் சேரச் செய்த பாபாவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனக்கு ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளது, இது 2006 முதல்  இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் சந்தை மிகவும் மோசமாக இருந்தது. சந்தை மோசமாக இருப்பதால் வாங்குபவர் மற்றும் வாடகைக்கு வீடு  எடுப்பவர் யாரும் இல்லை, இதன் காரணமாக சந்தை எவ்வாறு மேம்படும் என்று நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். நவம்பர் 20, 2017 திங்கட்கிழமை அதிகாலையில் நான் வழக்கமாகச் செய்யும் காகட் ஆரத்தி செய்து கொண்டிருந்தேன். நான் ஆரத்தி செய்து கொண்டிருந்தபோத...