![]() |
சாய் ராம்! என் பெயர் சத்யா. நான் மே 2019 முதல் மகாபாராயணில் சேர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர் மீனாட்சி எனக்கு பாபாவின் ஒரு சிறிய படத்தை கொடுத்தார். நான் அதை என் பூஜை அறையில் வைத்திருந்தேன், டிசம்பர் 25, 2017 அன்று ஷீர்டிக்கு சென்று பாபா தரிசனம் செய்து வந்தேன்.
என் கணவரின் வேலை ஒப்பந்தம் முடிந்துவிட்டது, நாங்கள் வேற வேலைக்கு மாறலாம் என நினைத்து கொண்டிருந்தோம்.புதிதாக சாய்சத் சரித்திரம் படிக்க ஆரம்பித்து இருந்ததால் ஒவ்வொரு வாரமும் எனது மகாபாராயணத்தை மிகுந்த உற்சாகத்துடன் செய்தேன். படிக்கும் பொழுது பல முறை கண்ணீர் வந்தது, எனக்கு அவர் மீது அவ்வளவு நம்பிக்கையும் பக்தியும் இருப்பதை புரிந்துகொண்டேன். என் நண்பர் என்னை 9 வாரங்களுக்கு சாய் விரதம் செய்ய பரிந்துரைத்தார். செய்த முதல் வாரமே என் கணவருக்கு புதிய வேலை கிடைத்து விட்டது என்று வேலை ஒப்பந்த பணி கடிதம் கொண்டு வந்தார்கள். அவர் விரைவில் தனது புதிய வேலையில் சேரவுள்ளார்.எல்லாமே பாபாவின் அருள் தான் என்று உணர்ந்தேன்.
சாய்க்கு நன்றி. என்னை மகாபாராயணில் சேர வைத்த மக்களுக்கு நன்றி. பாபாவின் அருளால் எனது மகளின் பெயரை பால பாராயணம் குழுமத்தில் இல் சேர்த்துள்ளேன். ஓம் சாய் ராம்!
பாபாவின் பக்தர்
சத்யா
https://experiences.mahaparayan.com/2020/07/my-mahaparayan-experience.html?m=1

Comments
Post a Comment