பெயர் சொல்ல விரும்பாத ஷீர்டி சாய் பக்தர் கூறுகிறார்: பாபாவின் அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய் ராம். நான் சாய் பாபாவின் சிறிய பக்தன். தினமும் என் நாள் அவரின் பெயரில் தொடங்கி அவருடைய பெயருடன் முடிகிறது. நான் என் கணவர் மற்றும் குழந்தையுடன் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இல்லத்தரசி. நான் சுமார் ஒரு வருடமாக மகாபாராயணத்தில் பாராயணம் செய்து வருகிறேன். பாபா என் குடும்பத்தை ஆசீர்வதித்த எனது மிகச் சமீபத்திய அதிசயத்தை விவரிக்க விரும்புகிறேன்.
நான் கடந்த சில ஆண்டுகளாக மனதளவில் பலவீனமாக இருந்தேன், மன அழுத்தத்துடன் இருந்தேன். நான் எப்போதுமே இயற்கையாகவே மிகவும் அமைதியான பெண் , ஆனால் கடந்த காலங்களில் சில பயங்கரமான அனுபவங்கள் மற்றும் நான் சந்தித்த கஷ்டங்கள் காரணமாக, மனச்சோர்வுக்குள்ளானேன். எந்த காரணமும் இல்லாமல் நான் தூங்கும்போது அழுவேன், கண்ணீர் வடித்து என் கஷ்டத்தை போக்க முயற்சி செய்தேன். இது எனது குடும்ப வாழ்க்கையையும் பாதித்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கவே பயந்தேன், எங்கோ நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக ஒரு வலுவான உணர்வு என்னுள் இருந்தது.
எனது குழந்தை கடந்த 3 மாதங்களாக சில உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தது. நான் அவளை பல முறை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றேன், பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வந்தது. நான் கடுமையான மன அழுத்தத்திற்குச் சென்றேன், கூகுளிள் அறிகுறிகளைப் பற்றி படித்துவிட்டு மிகவும் பயந்தேன். மன அழுத்தம் காரணமாக எனக்கு காய்ச்சல் கூட வந்தது.
இறுதியாக, நான் எல்லாவற்றையும் பாபாவின் காலடியில் விட்டுவிட்டு, நான் தேவையில்லாமல் கூகுளில்அறிகுறிகளைப் பற்றி படிக்க மாட்டேன் என்றும், என் குழந்தையின் ஆரோக்கியத்தை அவர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு உறுதியளித்தேன். இதற்கிடையில், பக்தர்களின் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் உதி(விபூதி) சிறந்த மருந்து என்று படித்தது எனக்கு நம்பிக்கையை அளித்தது. பாபாவின் ஆசீர்வாதத்துடன் மெதுவாக என் குழந்தை உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்தாள். நான் மெதுவாக மன அழுத்தத்திலிருந்து வெளியே வருகிறேன், எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் எனக்கு ஒதுக்கப்பட்ட 2 அத்தியாயங்களின் பாராயனை செய்ய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நான் தினமும் சாய்நாத் ஸ்தவன் மஞ்சரி பாராயன் செய்கிறேன், விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறேன்.
நான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய் பாபா கோவிலுக்குச் செல்கிறேன், அது எனக்கு மிகுந்த அமைதியைத் தருகிறது. காயமடைந்த ஆத்மாவுக்கு இது ஒரு தைலம் போன்றது. எனக்கு சில விருப்பங்களும் உள்ளன, ஆனால் சாய் எப்போ அது கிடைக்க வேண்டுமோ அப்பொழுது அவற்றை நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன். சாய் பாபா நம் அனைவரையும் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்க ஆசீர்வதிப்பதாகவும், நம் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆசீர்வதிப்பதாகவும் பிரார்த்திக்கிறேன். ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் !!!
ஜெய் சாய் ராம்
பாபாவின் பக்தர்
https://experiences.mahaparayan.com/2020/08/baba-came-to-my-rescue.html?m=1

Comments
Post a Comment