கடும் பனிப் புயலில் இருந்து காப்பாற்றப் பட்டோம்
எனக்கு அனுமன்ஜியுடன் எனக்கு நிறைய அழகான அனுபவங்கள் உள்ளது, ஆனால் ஹனுமான் சாலிசாவுடன் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு 25 வயது. குளிர்கால விடுமுறையில் நான் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்தேன், என் தங்கையை சிகாகோவில் ஒரு விமானத்திற்காக கொண்டு சென்று விட்டு விட்டு வரவேண்டும். என் ஊரிலிருந்து இது 5 மணிநேர பயணமாகும். நான், என் அப்பா, என் இரண்டு சகோதரிகள் அன்று காலை காரில் பயணித்தோம். நாங்கள் அவளை இறக்கிவிட்டோம்.
அவளை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பிய கொஞ்ச நேரத்திலேயே முன் அறிவிக்கப்படாத கடுமையான பனிப்புயல் பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குள் சாலைகள் பனியால் மூடப்பட்டிருந்தன. பனிப்புயல் உடன் காற்றும் மிகவேகமாக இருந்ததால் நான் அப்பாவிடமிருந்து காரை வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன். ஏனென்றால் அப்பாவுக்கு இரவில் நன்றாக பார்க்க முடியாது. இங்கே சிக்கல் என்னவென்றால், இந்த நெடுஞ்சாலை மிக நீண்ட நெடுஞ்சாலை வழியில் வேறு எங்கும் திரும்பி செல்ல இயலாது. எங்களால் சாலையைப் பார்க்க முடியவில்லை. நான் முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஹனுமான் சாலிசாவை ஓத ஆரம்பித்தேன். என் அப்பாவும் சகோதரியும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் அனுமன் சாலிசாவை சொல்ல சொல்ல எங்களுக்கு முன்னே இருந்த பாதையில் புயல் குறைய ஆரம்பித்தது, சாலையை தெளிவாக பார்க்க முடிந்தது. அடுத்த 100 மைல்களுக்கு பனி குறைய ஆரம்பித்தது. இங்கே வேடிக்கையான விஷயம். நாங்கள் இதை ஓட்டிச் சென்றபின் எனது பின்புறக் கண்ணாடியில் பார்த்தபோது பனி மீண்டும் பெய்ய ஆரம்பித்திருந்தது. இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத ஒரு அனுபவம். அனுமன் சாலிசா எங்களை அன்று காப்பாற்றியது. அனுமன் அன்று எங்களைக் காப்பாற்றினார்.
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான்
Sonal Patel, Content Editor for a Health Information Company
Feb 2016
https://www.quora.com/What-are-your-personal-experiences-with-Hanuman-Chalisa இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments
Post a Comment