சாய் சத்யவிரத பூஜா என் கவலையை போக்கி நிம்மதியை கொடுத்தது
நான் ஒரு சாய் பக்தை என்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என் சகோதரியின் உடல்நிலை அவ்வளவாக சரியாக இல்லை. அவளுடைய மகன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பிற்காக வீட்டிலிருந்து படிக்கலாமா அல்லது ஹாஸ்டல் சென்று படிக்கலாமா என்று முடிவெடுக்கக் கூடிய ஒரு கட்டாயமான சூழ்நிலை. மகன் ஹாஸ்டல் சென்று விட்டால் அவளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை. அத்தகைய சூழ்நிலையில் நாம் சாய் சத்யவிரத பூஜை பூஜையை முதன்முதலாக அவளுக்காக செய்தேன் செய்த அன்று நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிற பிக்சர் மெசேஜ் எனக்கு கிடைத்தது அது போலவே அவர்கள் நல்ல பள்ளிக்கு அருகே வீடு மாறி சென்று எப்பொழுது சாயின் அருளால் முதலில் இருந்ததை விட ஒரு நல்ல சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறாள் சாய் அன்புக்கும் கருணைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அவரின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். நம்பிக்கையுடன் குருவை வணங்கினால் அவர் என்றும் தன்னுடைய பக்தர்களை கைவிடமாட்டார். ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் சாய்!

Comments
Post a Comment