Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் -20


நினைத்தவுடன் வந்து உதவிய ஹனுமான்

நான் அனுமான் பக்தை , நான் தினமும் அனுமன் சாலிசா படிப்பேன். அனுமன் சாலிசா குறித்து என்னுடைய அற்புதமான அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அனுபவம் எனக்கு 2014ம் ஆண்டு ஏற்பட்டது. நான் ஜே.எஃகே  விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்ல வேண்டும். விமானத்திற்கு ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது. நான் டெர்மினல் ஒன்றிலிருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தை பிடிக்க வேண்டும். டெர்மினல் ஒன்றுக்கு சென்ற பின்புதான் எனக்கு தெரிந்தது,நான் செல்ல வேண்டிய டெர்மினல், டெர்மினல் 3 என்பதும், நான் தவறாக டெர்மினல் ஒன்றிற்கு வந்துவிட்டேன் என்பதும் அப்போது தான் தெரிந்தது. செக்-இன் கவுண்டரை  இன்னும் பத்து நிமிடத்தில் மூடிவிடுவார்கள். டெர்மினல்  ஒன்றிலிருந்து டெர்மினல் மூன்று செல்ல கிட்டத்தட்ட அரைமணி நேரமாவது ஆகும். நான் இந்த விமானத்தை விட்டு விட்டால் நான் செலவு செய்த டிக்கெட் அனைத்தும் வீணாகிவிடும். டிக்கெட் பணத்தை நான் திரும்பப் பெற இயலாது. அதுமட்டுமன்றி கண்டிப்பாக மும்பைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம். என்னுடன் என்னுடைய 15 வயது மகளும் இருந்தாள். இந்த இக்கட்டான நேரத்தில் என்ன செய்வது என்று புரியாமல் மனதில் அனுமன் சாலிசாவை சொல்ல ஆரம்பித்தேன். ஹனுமான் என் கண்முன் நிற்பது போல் எண்ணி அவரிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை காப்பாற்றும்படி அனுமனை மனதார வேண்டினேன். திடீரென ஒரு ஆப்ரிக்கர் நாட்டவர்  என்னிடத்தில் வந்து என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்டார்.  நான் அவரிடம் என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை பற்றி சொன்னேன். அவர் என்னை அமைதிப்படுத்தி, கவலைப்படாதீர்கள் உங்களை நான் ஐந்து நிமிடத்தில் டெர்மினல் 3க்கு அழைத்துச் செல்ல முடியும் என்று சொன்னார். அவர் எங்களை அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு குறுக்கு வழியில் அவரஅழைத்துச் சென்றார். அந்த வழியில் 7 நிமிடங்களில் நாங்கள் மும்பைக்கு திரும்பும் விமானத்தின் கவுன்டரில் இருந்தோம். நான் செக்-இன்யை முடித்த பிறகு அவருக்கு நன்றி சொல்ல அவரை தேடினேன். அவரை எங்கும் காணவில்லை. இந்த சம்பவம் நடந்தது இந்தியாவில் அல்ல அமெரிக்காவில். எப்பொழுதெல்லாம் எனக்கு பிரச்சனை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஹனுமான் சாலீஸாவைப் நம்பிக்கையுடன் சொல்லி அனுமனை வேண்டும் போதெல்லாம் அவர் என்னை அனைத்து வித பிரச்சனைகள் இடமிருந்தும் காப்பாற்றியுள்ளார். நான் தினமும் படிக்கும் ஹனுமான் சாலிசா என்னையும் என் குடும்பத்தையும் காக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. நினைத்தவுடன் வந்து காப்பாற்றும் அனுமனுக்கு என்னுடைய மற்றும் என் குடும்பத்தின் உடைய நன்றியும் வணக்கங்களும்.



Dhiraj Kakad, works at Business
 Sep 14, 2018 
https://www.quora.com இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாயியின் கருணை!

  சாய் ராம்! நன்றி பூஜாஜி.  நான் மகாபாராயணத்தில் இணைந்து சாய்சத்சரித்திரம் படித்தேன் , இதற்கு முன்பும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். மற்றொரு சாய் அதிசயத்தை அனைத்து மகாபாராயண் பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கு ஆசீர்வதித்த பாபாவுக்கு நான் மனமார்ந்த நன்றி சொல்ல விரும்புகிறேன். நேற்று, நான் எனது வருடாந்திர    மருத்துவ பரிசோதனைக்கு ( medical checkup ) சென்றேன்.  மருத்துவர் பரிசோதித்தபோது என் மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். மார்பக புற்றுநோயைப் பற்றி சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டதால் நான் பயந்தேன். என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், எனக்கும் இருக்குமோ என்று???  எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 25 கீமோதெரபி மற்றும் சில கதிர்வீச்சுகளுக்கு ஆளானார், அவளும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கள் வாழ்க்கையில் இந்த நேரத்தில் ஒரு மருத்துவ சூழ்நிலையை என் குடும்பத்தினரோ அல்லது என்னால் கையாள முடியாது. 3 டி இமேஜிங் மற்றும் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 4

வாங்குபவரின் வடிவத்தில் பாபா உதவினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சாய் பக்தர் புஷ்பா பஜாஜ் கூறுகிறார்: அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய்ராம் . நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த புஷ்பா. நான் மகாபாராயணத்தைத் தொடங்கிய பிறகு எனக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சமீபத்தில் எனக்கு ஒரு அழகான அதிசயம் ஏற்பட்டது, இதை பாபாவின் அனைத்து பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை மகாபாராயணில் சேரச் செய்த பாபாவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனக்கு ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளது, இது 2006 முதல்  இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் சந்தை மிகவும் மோசமாக இருந்தது. சந்தை மோசமாக இருப்பதால் வாங்குபவர் மற்றும் வாடகைக்கு வீடு  எடுப்பவர் யாரும் இல்லை, இதன் காரணமாக சந்தை எவ்வாறு மேம்படும் என்று நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். நவம்பர் 20, 2017 திங்கட்கிழமை அதிகாலையில் நான் வழக்கமாகச் செய்யும் காகட் ஆரத்தி செய்து கொண்டிருந்தேன். நான் ஆரத்தி செய்து கொண்டிருந்தபோத...