ஷீர்டி சாய் பக்தர் பிரியாஜி கூறுகிறார்: சாய் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சாய் ராம். சாயினால் பல அனுபவங்கள் எனக்கு நடந்துள்ளது. ஆனால் இந்த மகாபாராயண் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு ஓய்வு பெற்ற நபர், நான் சாய் சத்சரித்ராவை சில முறை படித்திருக்கிறேன். அக்டோபர் 2018 இல், ஏற்கனவே மகாபாராயன் குழுவில் இருந்த எனது நண்பர் ஒருவர் என்னை அறிமுகப்படுத்தினார்.
நான் பூஜா கார்க் குழுவில் சேர்க்கப்பட்டேன், முதல் பாராயணம் பாபா காலமானதும் அவரது சமாதி பற்றியும் இருந்தது. இந்த அத்தியாயங்கள் ஏன் என்று நான் பாபாவிடம் கேட்டேன். இது வியாழக்கிழமை. என் கணவர் சனிக்கிழமை browse பண்ணிக் கொண்டிருந்தார், திங்கள் காகட் ஆரத்திக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளைப் பெற்றார். எங்களுக்கு அங்கே புகழ்பெற்ற சமாதி தரிசனம் இருந்தது. அங்கே என் மகனுக்கு குழந்தை வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, என் மருமகள் இந்த நல்ல செய்தியை உறுதி செய்தாள்.
நான் பாபாவுக்கு நன்றி தெரிவித்தேன், ஆனால் அவர் எனக்கு இன்னும் சில சோதனைகள் தந்தார். குழந்தையின் இதயத்தில் ஒரு சிறிய துளை இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில் அதிகமானோர் மஹாபாரயனில் சேர வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. நான் என் கணவரை சேரச் சொன்னேன் (அவர் என்னை விட தீவிரமாக ஈடுபட்டார்) மற்றும் குழந்தைக்கு சரியாக வேண்டும் என்றும் பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன்.
அடுத்த ஸ்கேன் 3மாதங்களுக்குப் பிறகு செய்த போது மருத்துவர்கள் எந்த துளையும் இல்லை என்று கூறினார்கள். என் பேரன் வயிற்றில் இருந்தபோது இதெல்லாம் நடந்தது. பாபா மிகப் பெரிய மருத்துவர் என் பேரனைக் காப்பாற்றி, எந்த சந்தேகமும் இன்றி நான் உங்களுடன் தான் இருக்கிறேன் என்று உறுதிப்படுத்தினார்.
ஜெய் சாய் ராம்
பிரியா கணேசன்
https://experiences.mahaparayan.com/2020/08/baba-greatest-doctor.html?m=1

Comments
Post a Comment