என் அம்மாவின் புற்று நோயை குணப்படுத்தினார்
என் பெயர் கமலா தேவி, நான் சாய்பாபாவை மிகவும் நம்புகிறேன், ஏனெனில் அவர் என்னுடைய அம்மாவின் உயிரை காப்பாற்றியவர். பிப்ரவரி1998 என் அம்மாவிற்கு கருப்பை வாயிலில் கட்டி இருப்பதை அறிந்தோம். கேன்சர் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது, மிகவும் வேதனை அடைந்தோம். ஒரு வியாழக்கிழமை எங்கள் ஊரில் அன்னபூரணி அம்மா அவர்கள் நடத்தும் சாயி பஜனையில் கலந்துகொண்டேன். அன்னபூரணி அம்மா அவர்கள் பஜனை நடக்கும்பொழுது என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய கண்களில் கண்ணீர் வந்தது. நான் அவர்களை பாபா போலவே உணர்ந்தேன், அவர்களிடம் என் அம்மா பற்றிய வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக சென்றேன். ஆனால் நான் பேசுவதற்குள் அவர்களே, என்னிடம் உன் அம்மா பற்றி கவலைப்பட வேண்டாம் . இன்னும் ஆறு மாதங்களுக்குள் உன் அம்மா சரியாகி விடுவார். அவர்கள் பாபாவின் தீர்த்தத்தை கொடுத்து, உன் அம்மா இந்த தீர்த்தத்தை தினமும் பருக வேண்டும் என்று கூறி என்னிடம் தீர்த்தத்தை கொடுத்தார். அன்னபூரணி அம்மா அவர்கள் சொன்ன மாதிரியே தினமும் நான்கு வேளை பாபாவின் தீர்த்தத்தை என் அம்மாவிற்கு நான் கொடுத்து வந்தேன். பாபாவின் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தேன். பிறகு ஜூன் 1998ல் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த ஸ்கேனில் கேன்சர் இருந்ததற்கான தடையும் எதுவும் இன்றி என் அம்மா முழுமையாக குணம் அடைந்து இருந்தார். பாபாவிற்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன் . எங்களுக்கு மிகப்பெரிய உதவி அவர் செய்திருக்கிறார் . அவருடைய மகத்துவத்தை விவரிக்கும் பொழுது என் உடல் சிலிர்க்கிறது
ஜெய் சாய்ராம்.
https://www.quora.com/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments
Post a Comment