Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் -15





என் அம்மாவின் புற்று நோயை குணப்படுத்தினார்


என் பெயர் கமலா தேவி, நான் சாய்பாபாவை மிகவும் நம்புகிறேன், ஏனெனில் அவர் என்னுடைய அம்மாவின் உயிரை காப்பாற்றியவர். பிப்ரவரி1998 என் அம்மாவிற்கு கருப்பை வாயிலில் கட்டி இருப்பதை அறிந்தோம்.  கேன்சர் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது, மிகவும் வேதனை அடைந்தோம். ஒரு வியாழக்கிழமை எங்கள் ஊரில் அன்னபூரணி அம்மா அவர்கள் நடத்தும் சாயி பஜனையில்  கலந்துகொண்டேன். அன்னபூரணி அம்மா அவர்கள் பஜனை நடக்கும்பொழுது என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய கண்களில் கண்ணீர் வந்தது. நான் அவர்களை பாபா போலவே உணர்ந்தேன், அவர்களிடம் என் அம்மா பற்றிய வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக சென்றேன். ஆனால் நான் பேசுவதற்குள்  அவர்களே, என்னிடம் உன் அம்மா பற்றி கவலைப்பட வேண்டாம் . இன்னும் ஆறு மாதங்களுக்குள்  உன் அம்மா சரியாகி விடுவார். அவர்கள் பாபாவின் தீர்த்தத்தை கொடுத்து, உன் அம்மா இந்த தீர்த்தத்தை தினமும் பருக வேண்டும் என்று கூறி என்னிடம் தீர்த்தத்தை கொடுத்தார். அன்னபூரணி அம்மா அவர்கள் சொன்ன மாதிரியே தினமும் நான்கு வேளை பாபாவின் தீர்த்தத்தை என் அம்மாவிற்கு நான் கொடுத்து வந்தேன். பாபாவின் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தேன். பிறகு ஜூன் 1998ல் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த ஸ்கேனில் கேன்சர் இருந்ததற்கான தடையும் எதுவும் இன்றி என் அம்மா முழுமையாக குணம் அடைந்து இருந்தார். பாபாவிற்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன் . எங்களுக்கு மிகப்பெரிய உதவி அவர் செய்திருக்கிறார் . அவருடைய மகத்துவத்தை விவரிக்கும் பொழுது என் உடல் சிலிர்க்கிறது 

ஜெய் சாய்ராம்.
https://www.quora.com/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாயியின் கருணை!

  சாய் ராம்! நன்றி பூஜாஜி.  நான் மகாபாராயணத்தில் இணைந்து சாய்சத்சரித்திரம் படித்தேன் , இதற்கு முன்பும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். மற்றொரு சாய் அதிசயத்தை அனைத்து மகாபாராயண் பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கு ஆசீர்வதித்த பாபாவுக்கு நான் மனமார்ந்த நன்றி சொல்ல விரும்புகிறேன். நேற்று, நான் எனது வருடாந்திர    மருத்துவ பரிசோதனைக்கு ( medical checkup ) சென்றேன்.  மருத்துவர் பரிசோதித்தபோது என் மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். மார்பக புற்றுநோயைப் பற்றி சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டதால் நான் பயந்தேன். என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், எனக்கும் இருக்குமோ என்று???  எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 25 கீமோதெரபி மற்றும் சில கதிர்வீச்சுகளுக்கு ஆளானார், அவளும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கள் வாழ்க்கையில் இந்த நேரத்தில் ஒரு மருத்துவ சூழ்நிலையை என் குடும்பத்தினரோ அல்லது என்னால் கையாள முடியாது. 3 டி இமேஜிங் மற்றும் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 4

வாங்குபவரின் வடிவத்தில் பாபா உதவினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சாய் பக்தர் புஷ்பா பஜாஜ் கூறுகிறார்: அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய்ராம் . நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த புஷ்பா. நான் மகாபாராயணத்தைத் தொடங்கிய பிறகு எனக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சமீபத்தில் எனக்கு ஒரு அழகான அதிசயம் ஏற்பட்டது, இதை பாபாவின் அனைத்து பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை மகாபாராயணில் சேரச் செய்த பாபாவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனக்கு ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளது, இது 2006 முதல்  இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் சந்தை மிகவும் மோசமாக இருந்தது. சந்தை மோசமாக இருப்பதால் வாங்குபவர் மற்றும் வாடகைக்கு வீடு  எடுப்பவர் யாரும் இல்லை, இதன் காரணமாக சந்தை எவ்வாறு மேம்படும் என்று நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். நவம்பர் 20, 2017 திங்கட்கிழமை அதிகாலையில் நான் வழக்கமாகச் செய்யும் காகட் ஆரத்தி செய்து கொண்டிருந்தேன். நான் ஆரத்தி செய்து கொண்டிருந்தபோத...