எனக்கு வர இருந்த மிகப்பெரிய துன்பத்திலிருந்து என்னை காப்பாற்றினார்
நான் என்னுடைய இந்த அனுபவத்தை கண்ணீருடன் எழுதுகிறேன். வெளிநாட்டு கல்வி கடன் பெறுவதற்காக நான் மிகவும் முயற்சி செய்தேன். என்னுடைய ஆவணங்கள் மதிப்பெண்கள் மற்ற எல்லா விஷயங்களும் சரியாக இருந்தாலும் கடைசி நேரத்தில் எனக்கு கடன் வழங்குவது மறுக்கப்பட்டு விடும். அன்றைய தினம் நான் சாய்பாபாவின் படத்தை பல இடங்களில் பார்த்தேன். சாலையில் , கார்களில் நான் சென்று வந்த கடையில், நண்பரின் வீட்டில் என எல்லா இடங்களிலும் சாய்பாபா படத்தை பார்த்தேன். இவ்வாறாக நான் சாய்பாபா படத்தை பல இடங்களில் பார்த்தால் அன்றைய தினம் ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது என்று எனக்கு தோன்றும். ஆனால் அன்றைய தினமும் எனக்கு கடன் கொடுக்கப்பட்டது என்ற செய்தியே எனக்கு கிடைத்தது நான் மிகவும் மனம் உடைந்தேன்.
கடன் அப்ளிகேஷனில் என் பெயர் மட்டுமன்றி என்னுடைய தந்தையின் பெயரும் இருந்தது. என்னுடைய விபரங்கள் நல்லபடியாக இருந்தாலும் என் தந்தையின் பின்னணி சரியாக இல்லை.
என் தந்தைக்கு வேறொரு குடும்பம் இருந்தது, அந்தக் குடும்பத்தில் குழந்தைகள் அவருடைய குழந்தைகள் அல்ல இருந்தாலும் அவர் அவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்குவார். என் தந்தை பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நிறைய கடன் வாங்கியிருந்தார், அவர்களுக்கு திருப்பிச் செலுத்தவில்லை. அவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மனைவிக்கு முன்னுரிமைகளை வழங்க மாட்டார், ஆனால் அந்த குடும்பத்தை எப்போதும் வசதியாக வைத்திருந்தார்.
இந்த வெளிநாட்டு கல்வி மட்டுமே, எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. சாய்பாபா படங்களை வழியெல்லாம் பார்த்தும் அன்றைய தினம் என்னுடைய கடன் அப்பிளிகேஷன் மறுக்கப்பட்டதை தெரியவந்து நான் மிகவும் உடைந்து போனேன், அழுதேன், என்னை கைவிட்டு விட்டதாக போன்றவைதான் மிகவும் வருந்தினேன் ஏன் அவரை நம்பினோம் என்று திரும்பத் திரும்ப தோன்றியது. அன்றைய தினம்
இரவு சுமார் 10 மணி, பாபா என் கனவில் வந்து, என்கடன் அனுமதிக்கப்பட்டு அது என்னுடைய அப்பாவின் கணக்கிற்கு செல்லும். பிறகு அதை உன் அப்பா உன் கணக்கிற்கு மாற்றாவிட்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்டார்.
அப்பொழுது தான் எனக்கு புரிந்தது, சாய்பாபா எவ்வாறு என்னை மிகப்பெரிய துன்பத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார் என்று . ஏனெனில் என் தந்தை எனக்கு அவருடைய கணக்கில் இருந்து 3000 ரூபாய் கொடுப்பதே பெரிய விஷயம் . அவரை நம்பி 30 லட்சம் அவர் கணக்கிற்கு சென்றால் அது என்னுடைய கணக்கிற்கு திரும்ப வரும் என்று கண்டிப்பாக நம்பிக்கையாக சொல்ல முடியாது. அவருக்கு நன்றி தெரிவிக்கவே இதை எழுதுகிறேன். சில நேரங்களில் சாய்பாபா நமக்கு செய்யும் நன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது, அதனால் நாம் நாம் நினைத்தவை எல்லாம் நடக்கவில்லை என்று அவர் மீது நம்பிக்கை இழக்கிறோம் . அவர்மீது வருத்தம் கொள்கிறோம்வருத்தம். ஆனால் நமக்கு நம் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதையே அவர் நமக்கு செய்கிறார். அவர் வழிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு பக்குவம் இல்லை.
நான் அவரை முழு மனதுடன் நேசிக்கிறேன், நான் வெளிநாடு செல்லாவிட்டாலும், என் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன், அச்சமின்றி நடத்துவேன், ஏனென்றால் அவர் என் பக்கத்தில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
ஜெய் சாய்ராம்.
https://www.quora.com/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments
Post a Comment