Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் -17





என் கணவரின் விசாவை புதுப்பித்து மீண்டும் அமெரிக்கா வர உதவினார்

அமெரிக்காவைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பக்தர் கூறுகிறார்: ஸ்ரீ சச்சிதானந்தாசத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய்! பாபாவின் தாமரை காலடிக்கு என் தாழ்மையான வணக்கங்கள். அவர் எனக்கு குரு மற்றும் கடவுள். நான் 11 வயதிலிருந்தே  சாய்பாபாவை கும்பிட்டு வந்தேன். ஆனால் பல ஆண்டுகளாக, குறிப்பாக உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற பிறகு, நான் பாபாவை மறந்துவிட்டேன் (என்னுடய ஒரு பெரிய தவறு), ஆனால்  சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்தியது, பாபா என்னை ஒருபோதும் மறக்கவில்லை. நானும் என் கணவரும் பாபாவின் கிருபையினாலும் இரக்கத்தினாலும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டோம், நான் அந்த அற்புதமான அனுபவத்தை இங்கே பதிவிடுகிறேன். எங்களுக்கு அவர் செய்த மிகப்பெரிய உதவிக்கு நாங்கள் அவருக்கு அனுதினமும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தில் நாங்கள் ஒருபோதும் அவருடைய திருவடிகளை விட்டுவிடக்கூடாது என்றும், அவர்மீது எங்களுடைய நம்பிக்கை எப்போதும் வலுவாகவும் அசையாமலும் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், நானும் எனது கணவரும் குடும்ப காரணங்களுக்காக இந்தியா செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், எனது கணவர் தனது எச் 1 பி பணி விசாவில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முத்திரை குத்த தூதரகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவரது விசா மறுக்கப்பட்டது. எங்களுக்கு என்ன செய்வது, வில என்று தெரியவில்லை. இதுபோன்ற மறுப்பு ஏற்பட்டால் அமெரிக்காவிற்கு மீண்டும் நுழைய விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இந்த செயல்முறை ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் கூறினர். நீண்ட காலம் இந்தியாவிலிருந்து வேலை செய்வது என்பது முடியாத காரியம். இந்தியாவுக்கு இடம்பெயர்வதுதான் ஒரே வழி. பல காரணங்களுக்காக, அந்த நேரத்தில் நாங்கள் இடமாற்றம் செய்ய விரும்பவில்லை.  பாபாவின் கிருபையால் எப்படியோ ஒரு ந்ல்ல குடியேற்ற வழக்கறிஞர் கிடைத்தார்.அவர் இந்த விசா மறுக்கப்பட்ட தற்கு சரியான காரணங்கள் எதுவும் இல்லாததால் நாம் அது குறித்து அவர்களுக்கு எழுதலாம் என்று தெரிவித்தார். அவை தூதரகத்திற்கு ஒரு மெமோ எழுதினார். அடுத்த இரண்டு மாதங்கள் கழிந்தும் எந்த முடிவும் தெரியவிலிலை.   நான் எனது வேலையை மீண்டும் தொடங்க , என் கணவரை விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு சென்றென். நாங்கள் இருவரும் மிகவும்  வேதனை அடைந்தோம். 


நான் சத்சரித்ரா மற்றும் தபோவனம் சப்தபாராயண்கள் இரண்டையும் செய்யத் தொடங்கினேன் . தொடர்ந்து அடுத்தடுத்த வாரம் மூன்று முறை பாராயணம் செய்தேன். பின்னர் நான் திடீரென ஒரு அமெரிக்க மகாபாராயன் குழுவில் கேப்டன் பதவியில் சேவா செய்ய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ..எஸ்.எம் (அனந்த் அகந்த் சாய் மகாஜாப்), நேர இடத்தைக் கண்காணிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எனது கணவரின் விசாவின் தற்போதைய சிக்கல்களுடன், எனது சொந்த விசாவும் கிட்டத்தட்ட முடியும் நேரம், ஆனால் சாய் அருளினால் கடைசி நிமிடத்தில்  எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்தது. அந்த நிறுவனமே என்னுடைய விசாவை புதுப்பித்தது.

என் கணவர் இரண்டாவது விசா நேர்காணலுக்கு ஒரு வியாழக்கிழமை சென்றார்.  அங்கு அதிகாரி அட்மினிஸ்ட்ரேஷன் தவறுதலால் தவறாக விசா மறுக்கப்பட்டு உள்ளது என்பதை என் கணவரிடம் தெரிவித்தார். அவர் இவ்வாறு சொன்னது என் கணவருக்கு விசா மீண்டும்  கிடைக்கும் நம்பிக்கையை கொடுத்தது. இதற்காக நாங்கள் பாபாவுக்கு நன்றி தெரிவித்தோம், ஆனால் விசா கிடைக்க மீண்டும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. . இறுதியாக 5 கடினமான மாதங்களுக்குப் பிறகு, ஒரு வியாழக்கிழமை  விசா வழங்கப்பட்டது. என் கணவர் மீண்டும் அமெரிக்காவிற்கு வர முடிந்தது (ஒரு வியாழக்கிழமை கூட). இந்த நேரத்தில், பாபாவின் கிருபையின் காரணமாக, என் கணவர் வேலை செய்த கம்பெனி விசா கிடைக்கும் வரை  என் கணவரை இந்தியாவில் இருந்து வேலை செய்ய அனுமதித்தது . பாபாவின் கருணையினால் மட்டுமே இது நடந்தது.  என்னுடைய கஷ்டமான சூழ்நிலையில் சாய் என்னுடன் இருக்கிறார் என்பதை பல்வேறு விதமாக எனக்கு உணர்த்தினார். நாங்கள் இருவரும் அவருக்கு மிக மிக கடமைப்பட்டிருக்கிறோம் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் மீது நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

 ஓம் சாய் ராம்
https://www.quora.com/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாயியின் கருணை!

  சாய் ராம்! நன்றி பூஜாஜி.  நான் மகாபாராயணத்தில் இணைந்து சாய்சத்சரித்திரம் படித்தேன் , இதற்கு முன்பும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். மற்றொரு சாய் அதிசயத்தை அனைத்து மகாபாராயண் பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கு ஆசீர்வதித்த பாபாவுக்கு நான் மனமார்ந்த நன்றி சொல்ல விரும்புகிறேன். நேற்று, நான் எனது வருடாந்திர    மருத்துவ பரிசோதனைக்கு ( medical checkup ) சென்றேன்.  மருத்துவர் பரிசோதித்தபோது என் மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். மார்பக புற்றுநோயைப் பற்றி சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டதால் நான் பயந்தேன். என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், எனக்கும் இருக்குமோ என்று???  எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 25 கீமோதெரபி மற்றும் சில கதிர்வீச்சுகளுக்கு ஆளானார், அவளும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கள் வாழ்க்கையில் இந்த நேரத்தில் ஒரு மருத்துவ சூழ்நிலையை என் குடும்பத்தினரோ அல்லது என்னால் கையாள முடியாது. 3 டி இமேஜிங் மற்றும் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 4

வாங்குபவரின் வடிவத்தில் பாபா உதவினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சாய் பக்தர் புஷ்பா பஜாஜ் கூறுகிறார்: அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய்ராம் . நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த புஷ்பா. நான் மகாபாராயணத்தைத் தொடங்கிய பிறகு எனக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சமீபத்தில் எனக்கு ஒரு அழகான அதிசயம் ஏற்பட்டது, இதை பாபாவின் அனைத்து பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை மகாபாராயணில் சேரச் செய்த பாபாவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனக்கு ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளது, இது 2006 முதல்  இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் சந்தை மிகவும் மோசமாக இருந்தது. சந்தை மோசமாக இருப்பதால் வாங்குபவர் மற்றும் வாடகைக்கு வீடு  எடுப்பவர் யாரும் இல்லை, இதன் காரணமாக சந்தை எவ்வாறு மேம்படும் என்று நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். நவம்பர் 20, 2017 திங்கட்கிழமை அதிகாலையில் நான் வழக்கமாகச் செய்யும் காகட் ஆரத்தி செய்து கொண்டிருந்தேன். நான் ஆரத்தி செய்து கொண்டிருந்தபோத...