என் கணவரின் விசாவை புதுப்பித்து மீண்டும் அமெரிக்கா வர உதவினார்
அமெரிக்காவைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பக்தர் கூறுகிறார்: ஸ்ரீ சச்சிதானந்தாசத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய்! பாபாவின் தாமரை காலடிக்கு என் தாழ்மையான வணக்கங்கள். அவர் எனக்கு குரு மற்றும் கடவுள். நான் 11 வயதிலிருந்தே சாய்பாபாவை கும்பிட்டு வந்தேன். ஆனால் பல ஆண்டுகளாக, குறிப்பாக உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற பிறகு, நான் பாபாவை மறந்துவிட்டேன் (என்னுடய ஒரு பெரிய தவறு), ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்தியது, பாபா என்னை ஒருபோதும் மறக்கவில்லை. நானும் என் கணவரும் பாபாவின் கிருபையினாலும் இரக்கத்தினாலும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டோம், நான் அந்த அற்புதமான அனுபவத்தை இங்கே பதிவிடுகிறேன். எங்களுக்கு அவர் செய்த மிகப்பெரிய உதவிக்கு நாங்கள் அவருக்கு அனுதினமும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தில் நாங்கள் ஒருபோதும் அவருடைய திருவடிகளை விட்டுவிடக்கூடாது என்றும், அவர்மீது எங்களுடைய நம்பிக்கை எப்போதும் வலுவாகவும் அசையாமலும் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நானும் எனது கணவரும் குடும்ப காரணங்களுக்காக இந்தியா செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், எனது கணவர் தனது எச் 1 பி பணி விசாவில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முத்திரை குத்த தூதரகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவரது விசா மறுக்கப்பட்டது. எங்களுக்கு என்ன செய்வது, வில என்று தெரியவில்லை. இதுபோன்ற மறுப்பு ஏற்பட்டால் அமெரிக்காவிற்கு மீண்டும் நுழைய விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இந்த செயல்முறை ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் கூறினர். நீண்ட காலம் இந்தியாவிலிருந்து வேலை செய்வது என்பது முடியாத காரியம். இந்தியாவுக்கு இடம்பெயர்வதுதான் ஒரே வழி. பல காரணங்களுக்காக, அந்த நேரத்தில் நாங்கள் இடமாற்றம் செய்ய விரும்பவில்லை. பாபாவின் கிருபையால் எப்படியோ ஒரு ந்ல்ல குடியேற்ற வழக்கறிஞர் கிடைத்தார்.அவர் இந்த விசா மறுக்கப்பட்ட தற்கு சரியான காரணங்கள் எதுவும் இல்லாததால் நாம் அது குறித்து அவர்களுக்கு எழுதலாம் என்று தெரிவித்தார். அவை தூதரகத்திற்கு ஒரு மெமோ எழுதினார். அடுத்த இரண்டு மாதங்கள் கழிந்தும் எந்த முடிவும் தெரியவிலிலை. நான் எனது வேலையை மீண்டும் தொடங்க , என் கணவரை விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு சென்றென். நாங்கள் இருவரும் மிகவும் வேதனை அடைந்தோம்.
நான் சத்சரித்ரா மற்றும் தபோவனம் சப்தபாராயண்கள் இரண்டையும் செய்யத் தொடங்கினேன் . தொடர்ந்து அடுத்தடுத்த வாரம் மூன்று முறை பாராயணம் செய்தேன். பின்னர் நான் திடீரென ஒரு அமெரிக்க மகாபாராயன் குழுவில் கேப்டன் பதவியில் சேவா செய்ய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஏ.ஏ.எஸ்.எம் (அனந்த் அகந்த் சாய் மகாஜாப்), நேர இடத்தைக் கண்காணிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எனது கணவரின் விசாவின் தற்போதைய சிக்கல்களுடன், எனது சொந்த விசாவும் கிட்டத்தட்ட முடியும் நேரம், ஆனால் சாய் அருளினால் கடைசி நிமிடத்தில் எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்தது. அந்த நிறுவனமே என்னுடைய விசாவை புதுப்பித்தது.
என் கணவர் இரண்டாவது விசா நேர்காணலுக்கு ஒரு வியாழக்கிழமை சென்றார். அங்கு அதிகாரி அட்மினிஸ்ட்ரேஷன் தவறுதலால் தவறாக விசா மறுக்கப்பட்டு உள்ளது என்பதை என் கணவரிடம் தெரிவித்தார். அவர் இவ்வாறு சொன்னது என் கணவருக்கு விசா மீண்டும் கிடைக்கும் நம்பிக்கையை கொடுத்தது. இதற்காக நாங்கள் பாபாவுக்கு நன்றி தெரிவித்தோம், ஆனால் விசா கிடைக்க மீண்டும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. . இறுதியாக 5 கடினமான மாதங்களுக்குப் பிறகு, ஒரு வியாழக்கிழமை விசா வழங்கப்பட்டது. என் கணவர் மீண்டும் அமெரிக்காவிற்கு வர முடிந்தது (ஒரு வியாழக்கிழமை கூட). இந்த நேரத்தில், பாபாவின் கிருபையின் காரணமாக, என் கணவர் வேலை செய்த கம்பெனி விசா கிடைக்கும் வரை என் கணவரை இந்தியாவில் இருந்து வேலை செய்ய அனுமதித்தது . பாபாவின் கருணையினால் மட்டுமே இது நடந்தது. என்னுடைய கஷ்டமான சூழ்நிலையில் சாய் என்னுடன் இருக்கிறார் என்பதை பல்வேறு விதமாக எனக்கு உணர்த்தினார். நாங்கள் இருவரும் அவருக்கு மிக மிக கடமைப்பட்டிருக்கிறோம் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் மீது நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஓம் சாய் ராம்
https://www.quora.com/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments
Post a Comment