பாபாவின் தெய்வீக அருளால்...
என் பெயர் கருணா கீர்த்தி. எனது அற்புதமான அதிசயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்அன்புள்ள பாபா, நீங்கள் எப்போதுமே எனக்காக, ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு பிரச்சனையிலும் இருந்திருக்கிறீர்கள். பாபா உங்களுக்குத் தெரியும், நான் கடைசி மூன்று ஆண்டுகள் வேலை மாற்ற முயற்சித்தேன். நான் பல நேர்காணல்களைக் கொடுத்தேன், சிறப்பாக செயல்பட்டேன், ஆனாலும் வேலை கிடைக்கவில்லை. நான் மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமடைந்தேன். விரக்தியும், குறைந்த நம்பிக்கையும் வாழ்க்கை சென்றது. பின்னர் எனது சகோதரர் கமல் மஹாபாராயண் (மாஸ் குழு பிரார்த்தனை மற்றும் ஸ்ரீ சாய் சரித்திரத்தைப் படித்தல்) பற்றி என்னிடம் கூறினார். நான் நீண்ட கால சாய் பக்தர், ஆனால் இந்த நேரத்தில் நான் குளோபல் மகாபாராயனில் பங்கேற்கும் மனநிலையில் இல்லை ஆனால் விருப்பமின்றி நான் சகோதரருடைய வார்த்தையின் பொருட்டு பங்கேற்றேன். நான் மகாபாராயண் செய்யத் தொடங்கியதிலிருந்து, பாபா எப்போதும் என் பக்கத்திலேயே இருப்பதை உணர்ந்தேன்.ஒரு நாள் ஒரு பிரபல நிறுவனத்தின் எச்.ஆரிடமிருந்து எனக்கு வேலை அழைப்பு வந்தது. நான் நடுநிலை உணர்வோடு நேர்காணல்களில் கலந்துகொண்டேன். நான்நேர்காணலின் இரு சுற்றுகளில் வெற்றி பெற்று விட்டேன், ஆனால் இறுதி அழைப்பு குறித்து நான் உறுதியாக இல்லை. ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது இறுதி அழைப்பு வந்தபொழுது . நான் பாபாவுக்கு மிகவும் நன்றி தெரிவித்தேன். வேறொரு வேலை கிடைக்க அவர் எனக்கு உதவினார்.மேலும் 2 மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் அற்புதம் செய்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் மீண்டும் எனது சொந்த ஊருக்கு வந்தேன். எனது நிறுவனம் என்னை எனது சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்தது. தேவை இல்லாமல், சாய் என்னை ஆசீர்வதித்து பல பல மகிழ்ச்சிகளை கொடுத்தார்.
https://worldshirdisaibaba.org/share-your-experience/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments
Post a Comment